Tamil-kavidai

Unnodu sapida vendum

நீ கரைந்து போவதாய் உண்மை சொன்னாய்

அடியே அக்மார்க் அழகி.... ஆசையாய் முதலாய்... கட்டிகொண்டாய் பட்டு புடவையை... இனி எப்படி அவிழ்ப்பாய்... உன்னை பைத்தியமாக இறுக கட்டிக்கொண்டு உள்ளதே புடவை..? ************************************** என் கவிதை வரிகளில்.... நீ கரைந்து போவதாய் உண்மை சொன்னாய்... உன் செவ்விதழ் வரிகளில்... நான் கரைந்து போகும் உண்மையாக சொன்னதில்லை இதுவரை..?! ************************************** என்ன சாப்பிட்டாலும்... மனசு நிறைய மாட்டேன் என்கிறது.... உன்னோடு 'பாதி பேல்பூரி' சாபிட்டாலும் பூரித்து போகிறது மனசெல்லாம்,,? *****************************************  ..


Indrum yedthuviten irandu payana chitu

இன்றும் எடுத்து விட்டேன் இரண்டு பயண சீட்

இன்றும் எடுத்து விட்டேன் இரண்டு பயண சீட்டு பேருந்தில்... நீ என்னுடன் இல்லை என்று ஏற்றுகொள்ளவே முடிவதில்லை இந்த பாழ் மனசால்..!!   ..


For ur exam i prayed more than u studied

உன் பரிட்சைக்கு நான் பிரார்த்தனை செய்தத&

உன் பரிட்சைக்கு நீ படித்ததைவிட... நான் உனக்காக பிரார்த்தனை செய்ததே அதிகம்..!! நீ என்னை காயப்படுத்திகொண்டே இருக்கிறாய்... நானோ உன்னை கவிதையாக்கி கொண்டே இருக்கிறேன்..?!   ..


Aaval mananal madayil natpu illai kadhal

அவள் மணநாள் மேடையில் - காதல் என்றாள்

என்னை பார்த்து சிரித்தாள்।,எனக்கு கரம் கொடுத்து சீராக்கினாள்।,'காதலா?' என்றேன்।,'இல்லை।, அன்பு' என்றாள்। எனக்கு துன்பம் என்றால், அவள் துடித்தாள்।,என் கஷ்டம் அவள் சகிக்க மாட்டாள்.,'காதலா?' என்றேன்.,'இல்லை., அன்பு' என்றாள். என்னுடனேயே இருந்தாள்என் உயிர் போல் ஆனாள்।,'காதலா?' என்றேன்.,'இல்லை., அன்பு' என்றாள். அவள் மணநாள் அவள் மணநாள் மேடையில்,என்னைப் பார்த்து கண்ணீர் சிந்தினாள்.'அன்பா?' என்றேன்.,'இல்லை., காதல்' என்றாள்...   ..


Un alagiya ninavugalil yennai maranthuvidugiren

என் வேலைகளைத்தான் கொஞ்சம் மறந்துவிடுகி&#

காத்திருக்கும் நேரத்தில் நட்சத்திரங்களை கணக்கிட்டு முடிக்கும் வரை வராத.... நீதான் எத்தனை நல்லவள்..? ********************************************************** என் பணிகளுக்கு இடையே உன்னை மறந்து விடுவதாக புலம்பும் என் செல்ல அலம்பல்காரி... உண்மை என்னவென்றால் உன் அழகிய நினைவுகளின் அணிவகுப்பில் என் வேலைகளைத்தான் கொஞ்சம் மறந்துவிடுகிறேன்...!?   ..


Unakaga kavithai yealuthiyavudan athu thani alagu paduthikolvathu pol

கண்ணாடியில் முன்னும் பின்னும் பார்த்து &

உனக்கான கவிதை எழுதியவுடன் அது தன்னை முன்னும் பின்னும் அழகுபடுத்தி கொள்கிறது... புதிதாய் புடவை அணிந்தவள் கண்ணாடியில் முன்னும் பின்னும் பார்த்து அழகுபடுத்தி கொள்வது போல.. ********************************************** இத்தனை கவிதைகளை நான் எங்கே இருந்து திருடுகிறேனோ..? என நீ யோசிக்கிறாய். இத்தனை அழகுகளை நீ எங்கே இருந்து திருடுகிறாயோ..? என நான் யோசிக்கிறேன். ************************************************ தொடர்ந்து படித்தால் சோர்வு ஏற்படும்... இடை இடையே என்னை நினை...!! தொடர்ந்து மௌனமாய் இருந்தால் .... மொழி மறந்து போகும்... இடை இடையே ஒரு குறுஞ்செய்தி அனுப்பு...!!   ..


Indraiya unavu nalaya unnavu

இன்றைய உணவு நாளைய நோய்

ஒரு இணை இணைந்த மணவிழாவில்தான் என் இணையை இழந்தேன்.. ஒற்றை செருப்பு. *********************************************************** பாராட்டித்தான் உன் நண்பனாக நீடிக்க முடியுமென்றால் உன் எதிரியாக இருந்தே விமர்சனம் செய்து உன்னை விளம்பரம் செய்கிறேன். *********************************************************** மோர் போய் காப்பி வழக்காயிற்று... திண்ணை இடித்து மதில் சுவர் எழும்பியாச்சு.... அடுத்த நோய் என்ன...? ********************************************************** இன்றைய உணவு நாளைய நோய் பற்றி சிந்திக்கிறது... உனக்கு எதிரி உனக்குள்ளே...!! ********************************************************* நான் ருசித்ததை என் மகன் படத்தில் மட்டும்தான் காண்பானோ...? இரவோடு இரவாக நட்டினேன் ஒரு "மா" மரம்...!!   ..


Kadhal valkaiyai aalguakirathu

காதல் பொய் என்று சொன்னாய் - நட்பாக

நட்பாக பழகிய நாளில் சொன்னாய்.. "காதல் பொய் என்று..!!" நானும் "ஆமாம்..காதல் பொய் தான்...!"என்றேன். பின் காதலாகி மணமுடித்த பின் ஓர் நாள்.. சட்டை பொத்தானை போட்டபடி "காதல் வாழ்கையை அழகாக்குகிறது..!!" என்றாய். நானும்... "ஆமாம் அழகாக்குகிறது..!!"என்றேன். நீ சிணுங்கியபடி... "ஆமாம் என்பதை தவிர வேறு எதுவும் சொல்ல மாட்டீர்களா..? என்றாய். சிரித்தபடி சொன்னேன் "இல்லை என்று சொல்லியிருந்தால் நீ கிடைத்து இருப்பாயா சிணுங்கி..?"என்றதும் கொட்டினாய் காதலாய்...!!   ..


Ne poi vitaai nee yen ulaga alagi

இனி யாராவது வழியில் உலக அழகாய்

நீ போய் விட்டாய்.... இனி யாராவது வழியில் உலக அழகாய் வந்தாலும் அசைக்க முடியாது என் இதயத்தை...? என் கவிதைகளை படித்து இவ்வளவு தூரம் உங்களை இம்சித்தவள் யார்..? என்று எவளாவது கேட்பாள்...!! பதிலுக்கு நான் நீயென்னை மறந்து விட சொன்னபோது ஒரு 'வெற்று புன்னகையை' உனக்கு பதிலாக அளித்தேனே அதையே அவளுக்கும் பதிலாக கொடுப்பேன்..!   ..


Sugumaran kavithai muthal penuku

முதற்பெண்ணுக்குச் சில வரிகள்

முதற்பெண்ணுக்குச் சில வரிகள் இரவின் திரைக்குள் மறையும் திசைகள் இரண்டு அலைவேளைகளுக்கு இடையில் மௌனம் அல்லது இரண்டு மௌனங்களுக்கு இடையில் அலைமீட்டல் என கரையின் புறங்களில் கடலின் முடிவற்ற சங்கீதம் உனது பிம்பம் நிலைக்கண்ணாடியிலிருந்து கிளம்பி வந்ததுபோல் நடந்து மறைந்தாள் எவளோ. இதோ நீ எதிர்ப்பட்ட அநாதிக்காலத்தின் ஏதோ ஒரு நொடி ஆனந்த வெளியாக ஒளி ததும்பி நிற்கிறது நினைவில் இதோ பார்வையில் அகலும் பெண்முகங்களில் எல்லாம் உனது நீர்த்திரைக் கண்களைத் தேடி அலுக்கிறது பொழுதின் தனிமை பரிசுப்பொருட்களும் குதூகலமுமாய் வந்தவர்கள் மயானம் கலைபவர்களாய்ச் சொல்லாமல் போகிறார்கள் நட்போ காதலோ இப்படித்தான் வாய்க்கின்றன பெண்ணே எனது உறவுகள் இப்போதும் நீ வரலாம்  ..


Vairamuthu kavithai pood kalnenji

பூக்களும் காயம் செய்யும்

பூக்களும் காயம் செய்யும் போடி போடி கல்நெஞ்சி! மார்புக்கு ஆடை மனசுக்கு பூட்டு ஒரே பொழுதில் இரண்டும் தரித்தவளே! காதல் தானடி என்மீதுனக்கு? பிறகேன் வல்லரசின் ராணுவ ரகசியம்போல் வெளியிட மறுத்தாய்? தூக்குக்கைதியின் கடைசி ஆசைபோல் பிரியும்போது ஏன் பிரியம் உரைத்தாய்? நஞ்சு வைத்திருக்கும் சாகாத நாகம்போல் இத்தனை காதல் வைத்து எப்படி உயிர் தரித்தாய்? இப்போதும் கூட நீயாய்ச் சொல்லவில்லை நானாய்க் கண்டறிந்தேன் இமைகளின் தாழ்வில் - உடைகளின் தளர்வில் - என்னோடு பேசமட்டும் குயிலாகும் உன்குரலில் - வாக்கியம் உட்காரும் நீளத்தில் - வார்த்தைகளுக்குள் விட்ட இடைவெளியில் - சிருங்காரம் சுட்ட பெருமூச்சில் வறண்ட உதட்டின் வரிப்பள்ளங்களில் - நானாய்த்தான் கண்டறிந்தேன் காதல் மசக்கையில் கசங்கும் உன் இதயத்தை. சேமித்த கற்பு சிந்தியா போயிருக்கும்? நீயாக கேட்டிருந்தால் நெஞ்சு மலர்ந்திருப்பேன் உண்டென்றால் உண்டென்பேன் இல்லையென்றால் இல்லையென்பேன் இப்போதும் கூட தேசத்துரோகமென்பதை ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி உள்ளாடும்  ..


Moondram pirai song kamalhasan

மூன்றாம்பிறை - கண்ணே கலைமானே

படம் : மூன்றாம்பிறை பாடல் : கண்ணே கலைமானே கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உன்னை நானே அந்திப் பகல் உன்னை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் ராரிராரோ ஒராரிரோ ராரிராரோ ஒராரிரோ (கண்ணே...) ஊமை என்றால் ஒரு வகை அமைதி ஏழை என்றால் அதில் ஒரு அமைதி நீயோ கிளிப்பேடு பான் பாடும் ஆனந்தக் குயில் பேடு ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது (கண்ணே...) காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் கண்மணி உன்னை நான் கருத்தின்னில் நிறைத்தேன் உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை  ..


Aligal oivathillai tamil songs

அலைகள் ஓய்வதில்லை lyrics

படம் : அலைகள் ஓய்வதில்லை lyrics பாடல் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து இசை : இளையராஜா வரிகள் : வைரமுத்து விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு (விழியில்...) உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் அத்தனை ஜென்னலும் திறக்கும் நீ சிரிக்கும்போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும் நீ மல்லிகைப் பூவை சூடிக்  ..


Sleep song

தாலாட்டு

குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தலாட்டு ஆகும். பட்டுப் பாப்பா தூங்கு!-நீ பாலும் குடித்தாய் தூங்கு! மொட்டில் மணக்கும் முல்லை!-என் முத்தே என்ன தொல்லை? சிட்டாய் ஆடிப் பறந்தாய்-உன் சிரிப்பால் எங்கும் நிறைந்தாய். பிட்டும் தருவேன் தூங்கு!-என் பெண்ணே கண்ணே தூங்கு!   ..


Nillavai vanguven

நிலாவை வாங்குவேன்

Tami Kavidai என்னைக்-கொஞ்சம்-கொஞ்சினால் ஒரே கனா என் வாழ்விலே அதை நெஞ்சில் வைத்திருந்தேன்... கனா மெய்யாகும் நாள் வரை உயிர் கையில் வைத்திருப்பேன்... வானே என் மேல் சாய்ந்தாலுமே நான் மீண்டு காட்டுவேன்... நீ என்னைக் கொஞ்சம் கொஞ்சினால் நிலாவை வாங்குவேன்...   ..



All rights reserved. © www.w3calculator.com